பிரபல கிரிக்கெட் வீரர் விமானநிலையத்தில் கைது!! பகீர் பிண்ணனி!!

 
கைது

 

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மேலும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சந்தீப் லமிச்சனே பெற்றிருந்த நிலையில் கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடியிருந்தார்.

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே.

இந்நிலையில் சந்தீப் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றம்சாட்டி உள்ளார். இது  குறித்து போலீசாரிடம் அவர் அளித்த புகாரில், ‘‘நண்பர் ஒருவர் மூலமாக கிரிக்கெட் வீரர் சந்தீப்பின் அறிமுகம் தனக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 21ம் தேதி காத்மண்டு ஓட்டலில் வைத்து சந்தீப் தன்னை பாலியல் பலாத்காரம் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில்  காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் சந்தீப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நேபாள கிரிக்கெட் வாரியம் அவரை விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்வதாக உத்தரவு பிறப்பித்தது. 

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே.

இந்நிலையில் சந்தீப் இன்று காலை 10 மணியளவில் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கரீபின் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுவிட்டு அவர் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார். மேலும் போலீசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக சந்தீப் தெரிவித்துள்ளார். 17 வயது ரசிகையை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்படும் வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web