அடி தூள்!! இன்று 3 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்!! மோடி தொடங்கி வைப்பு!!

 
வந்தே பாரத் ரயில்கள்

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு மக்களின் ஒரே சாய்சாக இருப்பது ரயில்கள் தான். இதனை மேலும் மேம்படுத்தவும், பயணிகளுக்கு ரயில்களில் வசதிகளை அதிகரிக்கவும் இந்தியன் ரயில்வே அதிரடி திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 400 வந்தே பாரத் ரயில்களை இந்தியா முழுவதும் இயக்க  திட்டமிட்டு வந்தது. இந்த திட்டத்தினை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

வந்தே பாரத்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையே உருவாக்கப்பட்டுள்ள ரயில் திட்டத்தை இன்று  பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். அடுத்து வரும்  3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறைக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு கொண்டு வரும் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான பணிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான ரெயில்வே திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நாளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளார்.நாளை காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரெயில் பயணத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, எக்ஸ்பிரஸ் ரயிலில் காந்திநகரில் இருந்து காலுபூர் வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் ரெயில்களில் இதுவரை பயன்படுத்தப்பட்ட ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் பயன்படுத்தப்படும். இதனால், 50 டன்கள் எடை குறைவதுடன், குறைவான அளவிலேயே ஆற்றலை உபயோகப்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே 2 வந்தே பாரத் ரெயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நாளை 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web