மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விதிக்கப்பட்ட பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வந்தது. இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
செப்டம்பர் இறுதி வாரம் முதலே தங்கம் அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. உலகளாவிய பங்கு சந்தை , வர்த்தக வீழ்ச்சி, உக்ரைன் போர் காரணங்களால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்றும் கிராமிற்கு ரூ70 அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 4775க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.560 அதிகரித்து ரூ.38,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 66.70க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ66700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!