மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்தது. ஆனால் செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் ஏறத் தொடங்கியது. தங்கத்திற்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்ட பிறகு ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை செப்டம்பர் தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. இதனால் நகை பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆனால் கடந்த வாரத்தில் ஏறத் தொடங்கிய பிறகு இல்லத்தரசிகள் கலக்கமடைந்தனர். இன்று மீண்டும் தங்கத்தின் விலை ஏறத் தொடங்கியுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ4705க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு ரூ120 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 37,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் சற்றே உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ62500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை தினம் இதனால் தங்கவிலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதால் நகை வாங்க மக்கள் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!