குட் நியூஸ்! தமிழக மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. பண்டிகை காலங்களும் துவங்கி உள்ளதால், திரும்புகிற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகவே சென்று வருகின்றனர். இந்நிலையில், ஏற்கெனவே அக்டோபர் 5ம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை, கூடுதலாக ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஒரு வார கால விடுமுறை நீட்டிப்பையும் சேர்த்து, அக்டோபர் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக தொடக்க கல்வித் துறை அறிவித்துள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி முதல் 12 ம் தேதி வரை எண்ணும், எழுத்தும் பயிற்சிகள் நடைபெற இருப்பதால், மாணவர்களுக்கு விடுமுறை நீடிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!