நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!! தொடர் உச்சத்தில் தங்கத்தின் விலை!!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அது முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கத்த்தின் விலை குறையத் தொடங்கியது.

தங்கம்

இதனால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்கி குவிக்க தொடங்கினர்.  ஆனால் இந்த வார த் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ1000க்கும் மேல் அதிகரித்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

அந்த வகையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,840க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.38,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதே நேரத்தில்  வெள்ளியின் விலை, 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web