அச்சச்சோ!! 34% சரிவில் எல்.ஐ.சி!! அதிர்ச்சியில் பங்குதாரர்கள், பாலிசிதாரர்கள்!!
அரசுத்துறை நிறுவனங்களில் மிக முக்கியமானது எல்.ஐ.சி. இதில் பொதுமக்கள் உட்பட பலரும் பங்குதாரராக உள்ளனர். சமீபகாலமாக எல்.ஐ.சி.யின் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் மூலதன மதிப்பு இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ4 லட்சம் கோடிக்கும் கீழாக சரிந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தின் பணச்சரிவை ஈடுகட்டும் வகையில் எல்.ஐ.சி ஊழியர்கள், பாலிசி தாரர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள் , பொதுமக்கள் பலரின் கடும் எதிர்ப்பையும் மீறி எல்.ஐ.சி. 2022 மே17ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அந்த நாள் முதல் எல்.ஐ.சி.யின் பங்குகள் சரிவை மட்டுமே சந்தித்து வருகின்றன. தொடக்கத்தில்ரூ 949 ஆக இருந்த எல்.ஐ.சி.யின் பங்குகள் தற்போது ரூ629 ஆக வீழ்ந்துள்ளது.
5 மாதங்களில் 34 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதால் எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு தற்போது ரூ 4 லட்சம் கோடிக்கும் கீழே குறைந்துள்ளது. மே 17ல் சுமார் ரூ 6 லட்சம் கோடியாக இருந்த மூலதன மதிப்பு தற்போது மூன்றில் ஒரு பங்கு மூலதன மதிப்பை இழந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள், பாலிசிதாரர்கள், ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். முதல் நாளில் 5வது இடத்தில் இருந்த எல்.ஐ.சி. தற்போது 14வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பெரும் பின்னடவை சந்தித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!