அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

 
அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சலால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சிலகடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சலால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அன்பில் மகேஷ்

நேற்று முதல் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் உடனே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் இரண்டு நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

இச்செய்தியால் திமுக தொண்டர்கள், அமைச்சர்கள்  சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அத்துடன் அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டி தொண்டர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்த தொடங்கியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web