அப்பாவாகிறார் மிர்ச்சி செந்தில்! விமரிசையாக நடந்தேறிய வளைகாப்பு நிகழ்ச்சி!

 
வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்

8 வருஷங்களாச்சு... திருமண வாழ்க்கையில் இப்போது அப்பாவாகிற சந்தோஷத்தில் இருக்கிறார் மிர்ச்சி செந்தில். சரவணன் மீனாட்சி தொடரில்  சரவணனாக மிர்ச்சி செந்திலும்,  மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்து, பெரிய திரையை எல்லாம் ஓரம் கட்டி, சின்னத்திரை சக்ஸஸ்புல் ஜோடியாக ரசிகர்களிடையே பெயர் பெற்றனர். அந்த தொடரில் நடித்து கொண்டிருந்த போதே இருவரும் காதல் வயப்பட, பின்னர் நண்பர்கள் புடை சூழ இருவரும்  மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.  

திருமணம் முடிந்து 8 வருஷங்களாச்சு. தம்பதியரின் அன்பைப் பகிர இப்போது மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவி ஸ்ரீஜாவின் வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் பெற்றோர் ஆக உள்ள சந்தோஷமான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறனர். 

பிரபல ரேடியோ ஜாக்கியான 'மிர்ச்சி' செந்தில், திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி சீரியல் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது இவரும், இவரின் மனைவி ஸ்ரீஜாவும் தான்.

சரவணன் மீனாட்சி - சீரியலில் இவர்கள் இவருக்குமான கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. எனவே இவர்கள் இருவரும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தால் நன்றாக 
இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், நிஜத்திலும் இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்த்தனர்.

 திருமணம் ஆனபின்னரும், இவர்வரும் சேர்ந்து 'மாப்பிள்ளை' என்கிற ஒரு தொடரில் நடித்தனர். பின்னர் செந்தில் மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்த நிலையில், ஸ்ரீஜா தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து வந்தார்.

செந்தில் - ஸ்ரீஜாவுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்த புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் இருவரும் பெற்றோர் ஆக உள்ள தகவலை, கூறியுள்ளார் செந்தில். இதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web