என் சகோதரனின் பயணம் முடிந்து விட்டது! கதறியழுத நடிகை குஷ்பு! பிரபலங்கள் ஆறுதல்!

 
குஷ்பு

என் சகோதரனின் பயணம் முடிந்து விட்டது. அவருக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்று ட்விட்டரில் தனது சோகத்தை பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு தற்போது படங்கள் நடிப்பதிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நாட்டு நடப்பு மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார்.


சமீபத்தில் சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தைத் தயாரித்தவர், தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மின்சார கண்ணா படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

குஷ்பூ

இந்நிலையில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய சகோதரர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டரில் கடந்த 4 நாட்களாக இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்ததாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் நடிகை குஷ்பூ  உருக்கமாக பதிவிட்டிருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது ஆத்மா சாந்தியடையவும்  பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மார்கழியில் ஏன் சுபகாரியங்களைச் செய்ய கூடாது?!

From around the web