பரிதாபம்! நாயின் கொடூர தாக்குதல்! பசுவுக்கு நேர்ந்த கதி!

 
பிட்புல் நாய்

பசு மாடு ஒன்றின் தாடையை எவ்வளவு தடுத்தும் விடாமல் பலமாக கடித்து குதறி பிட்புல் நாய் ஒன்று தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கேரளாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. தெருவில் நடந்து செல்ல சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சம் அடைந்துள்ளனர். சமீபத்தில் தெருவில் சைக்கிள் ஓட்டி சென்ற சிறுவனை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிட்புல் நாய்

இந்நிலையில் பிட்புல் ரக நாய் ஒன்று பசுவை விடாமல் கடித்து குதறும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பிட்புல் நாயிடம் இருந்து பசுவை காப்பாற்ற ஒன்றன் பின் ஒருவராக முயற்சித்தும் பலனளிக்காமல் அது தனது பிடியை விடாமல் தொடர்ந்து பசுவை கடித்துக் கொண்டிருக்கிறது. பின்னர் கடும் முயற்சிக்கு பிறகு அந்த நாயிடம் இருந்து பசு மீட்கப்பட்டது. அந்த பசுவின் தாடை பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.


இப்படி பிட்புல் ரக நாய்களால் அடிக்கடி கொடூர தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிக காயங்கள் மட்டுமல்லாமல் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிட்புல் நாய் தன்னை வளர்த்து வந்த பெண்ணையே கடித்து குதறி கொடூரமாக தாக்கியது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற அபாயகரமான பிட்புல் ரக நாய்களை வளர்ப்பது நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுரைகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பழங்காலத்தில் பிட்புல் ரக நாய்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web