ஆர்.எஸ்.எஸ். உட்பட எந்த பேரணிக்கும் அனுமதியில்லை! தமிழக அரசு அறிவிப்பு!!

 
ஆர் எஸ் எஸ் பேரணி

தமிழகம்  முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம்  கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த  முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பேரணி

மேலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் அக்டோபர் 2ம் தேதியன்று விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் அறிவித்தார். மேலும் இதற்கு நாம் தமிழர் கட்சி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் திருமவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த நிலையில்  பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.

பேரணி

மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள தினத்தன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web