ஆட்சி, அதிகாரம்.. இளம்பெண் தற்கொலை! உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

 
கோகிலா

ஆட்சி, அதிகாரம்.. இதைப் பயன்படுத்தி காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததினால் காவல் துறையினரின் அத்துமீறல் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து வந்தது  புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்து உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் வசித்து வருபவர் நீலகண்டன். இவரது மனைவி கோகிலா (35). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணையா என்பவருக்கும் வீட்டுக்குள் செல்லும் பாதை தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததுள்ளது. இது குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் கண்ணையா புகார் அளித்தார். 

புகாரின் பேரில் கோகிலாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் நிபந்தனை ஜாமீன் பெற்று தினம்தோறும் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டு வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் கோகிலா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கோகிலா

அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் எனது சாவுக்கு காரணம் மேற்பனைக்காடு குமார், அவரது மனைவியும் காவல்துறையைச் சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் என்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் இழுத்து சென்று சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த கீரமங்கலம் காவல் நிலைய எஸ்ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி ஆகியோர் தான் என்று எழுதியிருந்தார்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி கோகிலாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்னைக்குரிய வீட்டு பாதை அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து கீரமங்கலம் போலீசில் கோகிலாவின் கணவர் நீலகண்டன் புகார் அளித்தார். இதையடுத்து  எஸ்ஐ ஜெயக்குமார், குமார் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

க்ரைம்

இந்நிலையில் நேற்று மாலை கோகிலாவின் உறவினர்கள் அறந்தாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோகிலா உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்பு கொண்டனர். ஆனால் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். இதன் பிறகு பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசாரும், அதிகாரிகளும் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web