கதறிய மகேஷ்பாபு! திரண்ட திரையுலகினர்! நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் காலமானார்!

 
மகேஷ்பாபு

ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் திரண்டு விட்டது. பிரபல நடிகரும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று காலை காலமானார்.  அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி, நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிகர் மகேஷ்பாபு மிகவும் பிசியான ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். தமிழில் ஸ்பைடர் என்ற படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங்குடன் இணைத்து நடித்திருந்தார்.

மகேஷ் பாபு

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்றும் வந்தார்.

நீண்ட நாள் சிகிச்சை பெற்ற வந்த இந்திராதேவி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். கிருஷ்ணா& -இந்திராதேவிக்கு தம்பதிக்கு மொத்தம் 5 குழந்தைகள். மகன்கள் ரமேஷ் பாபு மற்றும் மகேஷ் பாபு மற்றும் மகள்கள் பத்மாவதி, மஞ்சுளா மற்றும் பிரியதர்ஷினி.

மகேஷ்பாபு

நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் தாய் இந்திரா தேவியின் மரணத்தால் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்திரா தேவியின் மறைவு செய்தி கேட்டு திரையுலகத்தினர்,  அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

 

From around the web