அதிர்ச்சி!! கழிவுநீர் கால்வாய்க்கு உள்ளே மின்கம்பம்!!

 
மின்கம்பம்

தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று பெண்கள் பள்ளியில் இருந்து பெரிய கடைத்தெரு செல்லும் சாலையிலும்  புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டுமானப்பணி நடைபெற்ற வருகிறது.

தஞ்சாவூர் தஞ்சை
இந்த கழிவுநீர் கால்வாய்க்கு நடுவே ஏற்கனவே உள்ள மின்கம்பத்தை சுற்றி சிமெண்ட் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கழிவுநீர் கால்வாய்க்குள் ஓடாமல் வெளியில் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மின்கம்பத்தை அகற்றாமல் தற்போது கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நகராட்சி காண்ட்ராக்டர் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பொது மக்கள் புகார் கூறியும், நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரை வலியுறுத்தாமல் உள்ளனர். மேலும் எங்கள் புகார்களையும் கண்டுகொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

போலீஸ்

இவ்வாறு ஒப்பந்ததாரர்கள் செய்யும் செயல்களால் பொது மக்கள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஒப்பந்ததாரர் மற்றும் கிரில் கேட்டுடன் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்தகாரர்கள் மீது  ஏற்கனவே  நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web