அதிர்ச்சி!! இந்திய குடும்பம் கலிபோர்னியாவில் சடலமாக மீட்பு!!

 
ஜஸ்தீப் சிங்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் , குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில்    இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் வசித்து வருகிறார். அவருக்கு வயது 34 . இவருடன் இவரது மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டனர்.கடத்தியவர்கள் குறித்த விபரம் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் சிலர் இவரை கடத்தியிருக்கலாம் என காவல்துறை தெரிவித்தது. 

அமெரிக்க போலீஸ்
இதைத்தொடர்ந்து 4 பேரையும் கடத்திச் சென்ற மர்ம நபர் யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கடத்தல்காரர்கள் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததால் பொது மக்கள் அவர்களை நெருங்காமல்  தகவல் மட்டும் கொடுத்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கடத்தப்பட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அது பலனளிக்காமல் போனது.

அமெரிக்க போலீஸ்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட அமெரிக்க வாழ் இந்திய குடும்பதை சேர்ந்த 4 பேரும் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதனால் கலிபோர்னியாவில் பதற்ற நிலை நிலவுகிறது. இது குறித்து போலீசார் மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 பேரும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web