அதிர்ச்சி! ஆட்டோவில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! உபர் ஓட்டுநர் கைது!

 
உபர் ஆட்டோ

பாலியல் தொடர்பான வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பாலியல் சீண்டல்கள், கற்பழிப்பு, கொலை என கண்டிக்கவும், தண்டிக்கவும் யாருமில்லை என்கிற ரீதியில் பல இடங்களில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. நேற்று, ஆட்டோவில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உபர் ஆட்டோ ஓட்டுநரை தொடர்ச்சியான புகாருக்கு பின்னரே போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவிலும் பரபரப்பாக இயங்கும் சென்னையிலேயே இப்படி பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறுவது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதுவும் செல்போன் எண்களையும், வண்டியின் பதிவு எண்ணையும் தெரிவித்து விட்டு, சவாரிக்கு வரும் உபர், ஓலா போன்ற வாகனங்களில் ஓட்டுநர்களே இப்படி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, போலீசார் குறித்து அவர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

ஆட்டோ பாலியல் இளம்பெண்

இளம் பெண் ஒருவர் தரமணியில் இயங்கி வரும் பத்திரிகையாளர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை காவல்துறையை டேக் செய்து பகிரங்க புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தான் சோழிங்கநல்லூர் தங்கும் விடுதிக்கு உபர் ஆட்டோ மூலம் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் விடுதி வாசலில் இறங்கும் போது ஆட்டோ ஓட்டுனரான செல்வம் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதனால் பதறிப் போய் உதவி கோரியும் அங்கு அருகில் யாரும் இல்லாததால் தான் வேதனை அடைந்ததாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து  இளம் பெண் போலீசில் புகார் அளித்தும் பெண் காவலர் யாரும் இல்லாததால் காவலர் ஒருவர் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அரை மணி நேரம் கழித்து பெண் காவலர் ஒருவர் கல்லூரி மாணவி தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்து விசாரணை  நடத்தியுள்ளார். மேலும் இது குறித்து பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்றும் காவலர் வலியுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்தார். அதன் பின்னர் காவல் நிலையத்திற்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கூறி வெளியிலேயே புகாரை எழுதி வாங்கி அனுப்பி வைத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

மேலும் சமூக வலைதளத்தில் உபர் ஆட்டோ எண் மற்றும் ஆட்டோ ஓட்டுனரின் புகைப்படத்தையும் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டது வைரலானது. அதைத் தொடர்ந்து உபர் நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு நடந்த அனைத்து தகவலையும் கேட்டறிந்துள்ளது. புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் ஆட்டோ டிரைவர் செல்வத்தை தேடி வந்த நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டுநர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வெளியில் சென்று வரும் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை என்று தான் மாறுமோ?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web