அதிர்ச்சி! மூதாட்டி முகத்தில் மனித கழிவை பூசிய கொடூரம்!

 
சேலம் காவல்நிலையம்

மூதாட்டி ஒருவருடன் ஏற்பட்ட வாய் தகராறில், அவர் முகத்தில் மனித கழிவைப் பூசிய அவலம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. மனித கழிவைப் பூசிய நபரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் கொங்குபட்டி ஊராட்சியில் உள்ள கொத்தபுளியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாயி என்கிற நாகம்மாள் (90). அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர், மூதட்டிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், மூதாட்டியை அடிக்கடி ஆபாசமாக திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார் கிருஷ்ணன். 

இந்நிலையில், நேற்று மதியம் மூதாட்டி நாகம்மாள் வீட்டில் படுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற கிருஷ்ணன், மூதாட்டியை திட்டியுள்ளார், அப்போது மூதாட்டியும் கிருஷ்ணனை திட்டியுள்ளார். இருவரும் மாறிமாறி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருந்தனர்.

சேலம்

இந்நிலையில், கோபமடைந்த கிருஷ்ணன், மூதாட்டியை திட்டிக் கொண்டே, மனித மலத்தை எடுத்து மூதாட்டி முகத்தில் பூசியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நடந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் காவல் நிலையம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டி மீது மனிதக் கழிவை பூசிய கிருஷ்ணனை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web