அதிர்ச்சி! பர்தா போட மறுப்பு! மனைவியைக் கழுத்தறுத்து கொன்ற கணவன்!
பர்தா அணிய மறுத்த இந்து மதத்தைச் சேர்ந்த தன்னுடைய மனைவியை, கழுத்தறுத்து கொலை செய்துள்ளான் கணவன்.
மும்பையைச் சேர்ந்தவர் இக்பால் முகமது ஷேக். ரூபாலி என்கிற இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் வயப்பட்டு, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது. இக்பால் முகமது ஷேக், திலக் நகர் பகுதியில் தனது மனைவி ரூபாலியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே தொடர்ந்து இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றவும், பர்தா அணியவும் ரூபாலியை, ஷேக் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரூபாலி, அதனை விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
தொடர்ந்து இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற சொல்லி சண்டையிடுவதால், தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை பர்தா அணிய மறுத்ததற்காகவும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றாததற்காகவும் ஷேக், ரூபாலியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரூபாலியின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், இக்பால் முகமது ஷேக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!