அதிர்ச்சி! காதலுக்காக நண்பனின் உயிரைப் பறித்த கொடூரம்!

 
லட்சுமிகாந்த்

காதலுக்கு கண் இல்லைன்னு சொல்வாங்க. நிதானமும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள் இவர்கள். காதலுக்காக நண்பனின் உயிரைப் பறிக்கவும் துணிந்தவர்கள் இன்று காவல் நிலையத்தில் வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள். சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் கேளியம்மன் கோவில் பின்புறம் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்துள்ளது.

யார் இறந்தது என்று தெரியாமல், கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வந்தது. 

லட்சுமிகாந்த்

போலீசாரின் தீவிர விசாரணையில் உயிரிழந்த இளைஞர், ஶ்ரீராமலு தெருவை சேர்ந்த லட்சுமிகாந்த் (20) என்பது தெரிய வந்தது. உயிரிழந்த லட்சுமிகாந்த்தின் கையில் பிரதீப், சூர்யா என பச்சை குத்தப்பட்டு இருந்ததை வைத்து அதே பகுதியை சேர்ந்த 20 வயதான பிரதீப் மற்றும் சூர்யாவை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உயிரிழந்த லட்சுமிகாந்த் பிரதீப்குமாரின் காதலியை தவறாக பேசியதால் ஏற்பட்ட வாய் தகராறில் பிரதீப்குமார் பீர் பாட்டிலால் லட்சுமிகாந்தின் தலையில் அடித்துள்ளார். அப்போது லட்சுமிகாந்த் தப்பி ஓட முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததால், சதீஷ் கண்ணன் அவரின் தலையில் கல்லை போட்டுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து தாக்கியதில் லட்சுமிகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

லட்சுமிகாந்த்

இதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை 7 மணி நேரத்தில் பிடித்ததற்காக தனிப்படை போலீசாருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web