அதிர்ச்சி! சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து! நீரில் மூழ்கி 4 பேர் பலி!
சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படகில் பயணித்த 4 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்னமெரிக்க நாடான ஈகுவடாரின் மேற்கு பகுதியில் கலாபகோஸ் தீவு அமைந்துள்ளது. உலக புகழ் பெற்ற இந்த தீவுக்கு வருடந்தோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு ஒன்றில் கலாபகோஸ் தீவில் உள்ள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது படகில் எரிபொருள் தீர்ந்ததால் படகின் 3 என்ஜின்களும் வேலை செய்யாமல் நின்றது.
அதை தொடர்ந்து படகு ஊழியர்கள் என்ஜின்களை செயல்படவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நிலைதடுமாறிய படகு கடலில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈகுவடார் கடலோர காவல்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் அதற்குள் இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஒருவர் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 31 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!