இளைஞர் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை !! தொடரும் ஆன்லைன் ரம்மி பரிதாபங்கள்!!

 
சந்தோஷ்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், இதற்கு உடனடி தீர்வு காணவும் தனிக்குழு அமைக்கப்பட்டு பரிசீலணை நடைபெற்று வருகிறது. ரம்மியால் இளைஞர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் தற்கொலைகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல் ஒரு சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சந்தோஷ்

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையாண்டிபட்டியில் வசித்து வருபவர்  ரவிக்குமார். இவருக்கு சந்தோஷ் (22) என்ற மக்ன இருந்தார். இவர் மணப்பாறை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். சந்தோஷ் கடந்த 6 மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி அதற்கு அடிமையாகிவிட்டார். இதன் காரணமாக பணத் தேவைக்காக வீட்டிலுள்ள பணம், நகைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அதன் மூலம் ரம்மி விளையாடி இருக்கிறார்.


இந்நிலையில் நேற்று முன்தினம் ரவிக்குமார் தனது மகன் சந்தோஷிடம் வீட்டில் இருந்த அரை பவுன் மோதிரம் எங்கே என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்தோஷ் அவர்களிடம் நகையோடு திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.மோதிரத்தை வைத்து ரம்மி விளையாடியதில் அவர் அதனை இழந்ததால் ஏற்கனவே துக்கத்தில் இருந்தார். இந்நிலையில் தந்தை மோதிரத்தை கேட்டவுடன் விரக்தியடைந்த சந்தோஷ், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார்.

தற்கொலை


இதற்கிடையில் போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அதில் மணப்பாறை கீரை தோட்டம் என்ற இடத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் இறந்து கிடப்பதாக கூறப்பட்டது.  உடனடியாக சந்தோஷின் பெற்றோர் ரயில் நிலையத்திற்கு சென்று, இறந்து கிடந்தது தங்களது மகன்தான் என்பதை உறுதி செய்தனர்.இதை தொடர்ந்து ரெயில்வே போலீசார், மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web