சூப்பர்!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்!! அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிமாணவர்களும் கல்வி பெறும் வகையில் பல்வேறூ அதிரடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லம் தேடி கல்வி, காலையில் சிற்றுண்டி, இலவச புத்தகப்பை, சீருடை, சிறப்பு பயிற்சி வகுப்புக்கள், சிற்பி திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .
இத்திட்டங்கள் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் தற்போது மலைப்பகுதிகளில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியின் படி அடுத்த கல்வியாண்டில் அதாவது 2023-2024 ல் மலைப்பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உத்தேசித்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!