நீடிக்கும் பதற்றநிலை!! அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு !!

 
புதுச்சேரி

புதுச்சேரியில் இந்து அமைப்புக்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்கள் எதுவும்  ஓடவில்லை. இன்று காலை சுமார்  5 மணிக்கு  விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்து வந்தது.

அரசுப் பேருந்து

வில்லியனூர் மேம்பாலம் அருகே மின்துறை அலுவலகம் எதிரே அந்த பேருந்தை வழிமறித்த கும்பல் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டார். ஒருவழிப்பாதையில் வந்ததால் நடந்த சோகம் மேலும் எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்ணாடியையும் போராட்டகாரர்கள் அடித்து நொறுக்கினர். பைபாஸ் சாலையின் அருகே மற்றொரு தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

அரசுப் பேருந்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லியனூர் போலீசார் பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு பேருந்தை குறி வைத்து அடுத்தடுத்து 3 இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதட்டத்தை தணிக்க வில்லியனூர் பகுதியில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web