நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த கார்! சென்னையில் பரபரப்பு!

 
எரிந்த கார்

காரை ஓட்டிக் கொண்டு செல்லும் போதே திடீரென கார் பற்றி எரியத் துவங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காரை விட்டு கீழிறங்கிய அடுத்த நிமிஷத்திலேயே தீ பரபரவென கொளுந்துவிட்டு எரிய, காலை நேரத்தில் சென்னையில் பரபரப்பு அதிகமானது. சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு சொந்தமான காரில் பெருங்களத்தூரில் அமைந்துள்ள தனியார் ஐடி நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்று விட்டு பணி முடிந்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடும் வேலையைச் செய்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் அந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை காரில் ஏற்றி கொண்டு ராம்கி என்பவர் சென்றார். 

விபத்து

காரை ராம்கி திருவொற்றியூர் வரை வழியில் ஒவ்வொருவராக அவர்களது வீடுகள் உள்ள பகுதிகளில் இறக்கி விட்டப்படியே வந்துள்ளனர். இறுதியாக காலடிப்பேட்டையில் வீடு இருக்கும் ஊழியரை அருகில் இறக்கி விட்டு விட்டு ராம்கி எண்ணுரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல முற்பட்ட போது திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென காரில் இருந்து புகை வெளியேற துவங்கியுள்ளது. 

இதைக் கண்டு பதறிய ஓட்டுநர் ராம்கி காரை அங்கேயே நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்ப்தற்குள் கார் மளமளவென கொழுந்து விட்டு தீ பற்றி எரிந்தது. உடனடியாக திருவொற்றியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வாசுதேவன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். 

எரிந்த கார்

இருந்த போதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமாகியது. இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பற்றி மளமளவென எரிந்ததில் மயிரிழையில் ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web