குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை !! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம்

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை குறைந்து வந்தது இதனால் நகைப்பிரியர்கள், தங்க நகை முதலீட்டாளர்கள் நகைக் கடைகளில் தவம் கிடந்தனர். தங்கத்தினை வாங்கி குவித்து வந்தனர். ஆனால் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது.  இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தங்க நகை வாங்கவே முடியாதோ என்ற அச்சம் நடுத்தர வர்கக்த்தினரிடையே நிலவி வந்தது. 

தங்கம்

கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 7 ரூபாய் குறைந்து, ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, ரூ.37,520-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,848-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 6 ரூபாய் உயர்ந்து, ரூ.3,842-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web