காரில் கத்தியை காட்டி பணம் பறித்த நூதன கொள்ளையர்கள்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
ஓட்டுனர்

திருச்சி லால்குடியில் வசித்து வருபவர் பூபதி. இவருக்கு வயது 25. இவர் தனியார் கால் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து  வருகிறார். நேற்று காலை பூபதி ரயில்வே பார்சல் ஆபீஸ் சாலையில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மர்ம ஆசாமிகள் திடீரென வந்து நின்று பூபதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 2000ஐ  பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

திருடன்

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, உடனடியாக இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் சிவக்குமார் தீவிர விசாரணை நடத்தி வந்தார்.அதைத்தொடர்ந்து கால்டாக்சி டிரைவர் பூபதியிடம் பணம் பறித்தவர்களை போலீசார் அடையாளம் கண்டனர். அதன்படி திருச்சி மிளகு பாறை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்கிற வெந்தகை பாலா, கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ஷாஜகான் மற்றும் திருச்சி சந்தை கடை பகுதியை சேர்ந்த கணேஷ் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீஸ்

இவர்கள் மூவர் மீதும் கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், தில்லை நகர், அரியமங்கலம், எடமலைப்பட்டி புதூர், கோட்டை காவல் நிலையம் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நடுரோட்டில் நின்று கொண்டிருந்த கால் டாக்சி டிரைவரிடம் 3 பேர் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web