தொடரும் சோகம்!! துப்பாக்கி சூட்டில் மேயர் உட்பட 18 பேர் பலி!!

 
துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. தினசரி ஏதாவது ஒரு இடத்தில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல உயிர்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. பொது மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களில் துப்பாக்கிசூடுகள் நடத்தப்படுவதால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இளைய தலைமுறையும், வருங்காலமும் என்னாகுமோ என்ற அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. 

துப்பாக்கி

இந்நிலையில் தெற்கு மெக்சிகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  அந்நகரின் மேயர் உட்பட சுமார் 18 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இது குறித்து அரசு வழக்கறிஞர் மிலேனோயோ சாண்ட்ராலஸ் வால்டோவினோஸ் கூறும்போது, ‘‘துப்பாக்கிசூடு தாக்குதல் குரேரோ மாகாணத்தில் உள்ள டோட்டோலாபானில் நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்’’ எனத் தெரிவித்துள்ளார். 

துப்பாக்கி
துப்பாக்கிசூடு நடந்த பகுதி போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல்களின் கண்காணிப்பில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் பொது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web