கடப்பாரையால் கதவை உடைத்து கணவரின் வீட்டிற்குள் நுழைந்த மனைவி!! பகீர் பிண்ணனி!!

 
கடப்பாரை

திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகள் பிரவீனா. இவருக்கு வயது 30. இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில்  மன்னம்பந்தல் தெற்கு வெளியில் வசித்து வரும் ராஜேந்திரன் மகன் நடராஜஞுக்கும் 2021 பிப்ரவரியில்  திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பிரவீனாவுக்கு 24 சவரன் நகை, பைக் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். 

போலீஸ்

3  மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு பிரவீனாவுக்கு நடராஜன் வீட்டார் நெருக்கடி கொடுத்து வந்தனர். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நடராஜன், மனைவியை தன்னுடன் அழைத்து செல்லாமல் இருந்து வந்தார். மேலும் கணவர் வீட்டில் இல்லாத போது கணவரின் தம்பி சதீஷ் பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கணவரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். இந்நிலையில் பிரவீனாவை, வீட்டைவிட்டு வெளியேற்றியதுடன் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு கணவரின் குடும்பத்தினர் சென்று விட்டனர். இதனால்  தன் கணவரை கண்டுபிடித்து தன்னுடன்  வாழ வைக்ககோரி  பிரவீனா, கணவர் வீட்டு வாசலிலேயே  20 நாளாக காத்திருக்கிறார். இதனால்  ஊர்ப்  பஞ்சாயத்தார்கள்  நடராஜன் குடும்பத்தினரிடமும் இதுகுறித்து பேசியிருக்கின்றனர்.  ஆனாலும் அவர்கள் ஒத்துவரவில்லை.

இதனால் நேற்று முன்தினம் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் ஊர் பொதுமக்களுடன் சென்று பிரவீனா புகார் மனு அளித்தார். பின்னர் நேற்று இரவு பொதுமக்கள் உதவியுடன் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து மாமனார் வீட்டில் பிரவீனா புகுந்தார். அங்கு இரவு முழுவதும் தங்கி இருந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை

“எனது கணவர் இதுநாள் வரை எங்கிருகிறார் என்று தெரியவில்லை. எதனால் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள், என்னை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனது கணவரை கண்டுபிடித்து கொடுத்து என்னை அவருடன் வாழவையுங்கள்.  என் கணவர் வந்து என்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்று கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்”  என்று கூறும் பிரவீனா தனி மனுஷியாக தன் போராட்டத்தை தொடர்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web