இன்று விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல் ஓய்வு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
கே.எல்.ராகுல் விராட் கோஹ்லி

இந்தியாவில் டி 20 போட்டிகள்  நடைபெற்று வருகின்றன. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிவுற்ற நிலையில் இன்று 3 வது போட்டி . இந்தியா இதில் 2-0 என்ற நிலையில் போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று  3வது டி20 போட்டி  இந்தூரில் நடைபெற உள்ளது.

கே.எல்.ராகுல் விராட் கோஹ்லி
இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளில்  விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்  இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தற்போது அடுத்து வரவுள்ள உலகக்கோப்பை டி20 போட்டிக்கு தயாராகி வருகின்றனர். மேலும் அவர்களின் ஆட்டம் தொடர்வதால் உடல்நிலையை கருத்தில் கொண்டும் இந்த ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. 

கே.எல்.ராகுல் விராட் கோஹ்லி
அதே நேரத்தில் விராட் கோலிக்கு பதில் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்க இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவருடன் இணைந்து  காயத்தால் ஓய்வில் இருந்த தீபக் ஹூடாவிற்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு இருக்கலாம்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அக்டோபர் 2ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை கௌகாத்தியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் பரிசை தட்டி சென்றார்.  விராட் கோலி ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web