உலக சாதனை!! ஒரே நாளில் 108 மாணவர்களுக்கு 60 ம் கல்யாணம்!! களைகட்டும் கள்ளக்குறிச்சி!!

 
60ம் கல்யாணம்

இன்றைய காலகட்டத்தில் திருமணம் கேலிக் கூத்தாகி விட்டது. இளசுகள் திருமண பந்தத்தை மேற்கத்திய கலாச்சாரமாக மாற்றி வருகின்றனர். ஆனால் திருமணம் ஆயிரம் காலத்து பயிராக நம் கலாச்சாரத்தில் ஊறி கிடக்கிறது. இதன் வேர்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறி விட்டோம். நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும்.

60ம் கல்யாணம்

திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும், பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக் கூடிய ஒன்று. கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.

எனவேதான் திருமண பந்தத்தை பெரியோர்கள் முன்னிலையில் ஆசீர்வாதத்துடன் இனைக்கப்படுகிறது. அப்போது திருமண நாளில் பெரியோர்கள் பல்லாண்டு நீடூழி வாழவேண்டும் என மணமக்களை வாழ்த்துகிறார்கள். அவ்வாறு திருமணம் செய்யும் தம்பதிகள் ஏராளமானோர் மணிவிழாவை கடந்து பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். இந்த நிலையில் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது.

60ம் கல்யாணம்

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1977-78ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது அரசு பணி, சுயதொழில், தொழில் அதிபர்களாக வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து 60-ம் கல்யாணம் நடத்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் திட்டமிட்டனர். அதன்படி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 108 பேரின் விலாசம் கொண்டு அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து அகவை திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து நேற்று 108 முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர். 

இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் 108 பேருக்கும் 60ஆம் கல்யாணம் அந்தந்த குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்களின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்களின் 60-ம் கல்யாணம் ஒரே நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web