ரிமோட்டால் விபரீதம்... 13 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறித் துடித்த பெற்றோர்!

 
ஆதித்தன்

 கேரள மாநிலம் கண்டல்லூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி தங்கச்சன்-சிந்து. இவர்களுடைய மகன் 13 வயது ஆதித்தன். இவர் அதே பகுதியில் உள்ள  பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.  இவர்  பள்ளி சென்று வீட்டுக்கு திரும்பியதும் மாலை நேரத்தில் டிவி பார்ப்பதற்காக தன் தாயிடம் ரிமோட் கேட்டுள்ளான்.  டிவி ரிமோட்டை கொடுக்க அவருடைய தாயார் மறுத்துவிட்டார்.‌

தற்கொலை

இதனால் தன் அம்மாவிடம் கோபித்துக் கொண்ட சிறுவன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டான்.அன்றைய தினம் இரவில் கூட சிறுவன் அறையை விட்டு வெளியே வரவில்லை.  சிறுவன் கோபமாக இருப்பான். காலையில் சரியாகி விடுவான் என குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை ‌ ஆகியும் சிறுவனின் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை.

சிறுவன் பலி

பூட்டிய கதவும் திறக்கப்படவில்லை. இதனால்  சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையை சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கினான். இதை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web