13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. டீ மாஸ்டர் உள்பட 3 பேர் போக்சோவில் கைது!
பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் குமார். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவிநாசி பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமிக்கு டீ மாஸ்டர் குமார், மகேஷ்குமார் மற்றும் சிரஞ்சீவி என்ற குட்டி ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!