சக மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயது சிறுவன்... பள்ளி வளாகத்தில் பயங்கரம்!

 
அல்ஃபி லூயிஸ்

நவம்பர் 7 ஆம் தேதி லண்டன் கவுண்டியில் உள்ள லீட்ஸில் உள்ள ஹார்ஸ்போர்த் பகுதியில் 15 வயது சிறுவன் மற்றொரு 15 வயது சிறுவன் ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். அல்ஃபி லூயிஸ் ஹார்ஸ்போர்த்துக்கு அருகிலுள்ள ஆரம்பப் பள்ளியை விட்டு வெளியேறியபோது சக மாணவர்கள் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி மாலை 3 மணியளவில் ஹார்ஸ்போர்த்தில் உள்ள செயின்ட் மார்கரெட்ஸ் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளியை விட்டு வெளியேறும் போது சக மாணவர்கள் முன்னிலையில் சிறுவன் அல்ஃபி மீது தாக்குதல் நடத்தினான். தாக்குதலில் தனது வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சமையலறை கத்தியால் லூயிஸின் இதயத்தில் அல்ஃபி இரண்டு முறை குத்தினார். மேலும், கால்களில் இரண்டு முறை கத்தியால் குத்தினார். இதில் ஆல்ஃபி லூயிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது இதயத்தில் 14 சென்டிமீட்டர் ஆழத்தில் கத்தி இறங்கியதால் ஆல்ஃபி இறந்துவிட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலையை செய்த சிறுவன் தரப்பில், ஆல்ஃபி லூயிஸ் என்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில் தான் இப்படி செய்ததாக வாக்குவாதம் செய்துள்ளனர்.இப்போது இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் ஆல்ஃபி அன்று எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கத்தியால் குத்தினான் என்றும் தெரியவந்தது.

இதன் காரணமாக இந்த வழக்கில் 15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஆல்ஃபி லூயிஸை கொன்ற சிறுவனின் பெயர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆல்ஃபி லூயிஸின் குடும்பத்தினர் தீர்ப்புக்கு நடுவர் மன்றத்திற்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் 15 வயதில் இறந்த ஆல்ஃபி லூயிஸுக்கு அஞ்சலி செலுத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web