16 வயது சிறுவன் பெற்றோர், சகோதரியை கொடூரமாக சுட்டுக் கொலை !
பிரேசில் நாட்டில் சாவோ போலோ நகரில் வசித்து வரும் 16 வயது சிறுவன் தனது குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளான். இவரை ஒரு குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தந்தை இவருடைய செல்போனை பறிமுதல் செய்ததால் கோபத்தில் சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது பெற்றோர் மற்றும் சகோதரியை சுட்டு கொலை செய்தார். 3 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை குற்றத்தை செய்து விட்டதாக 16 வயது சிறுவன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

முதலில் சிறுவன் முனிசிபால் போலீஸ்காரரான தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து அவரது முதுகுப் பகுதியில் சுட்டுக்கொலை செய்தான். அடுத்து தனது 16 வயது சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தான். வெளியில் சென்றிருந்த தாய் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுவனிடம் விளக்கம் கேட்டார். அப்போது சிறுவன் தனது தாயையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளான். 3 நாட்கள் சடலங்களுடன் வாழ்ந்த சிறுவன் வழக்கம் போல் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு பேக்கரிக்கு சென்று உணவு பொருட்களை வாங்கியுள்ளார். கோபம் குறையாமல் சனிக்கிழமையும் உயிரிழந்த தாயின் உடலில் கத்தியால் குத்தியுள்ளான்.

சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அத்துடன் அந்த சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் சிறுவன் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கூலாக பதில் அளித்தது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் குற்றச்செயலின் போது சிறுவனிடம் யாராவது செல்போனில் பேசினார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்..
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
