5 வயது சிறுமி டெங்குவால் பலி... கதறித் துடித்த பெற்றோர்!

 
பூர்ணிமா
  
கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இதனையடுத்து மாநில அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் உயிர் பலிகளை தடுக்க முடியவில்லை.   தார்வார் மாவட்டத்தில் 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!
தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா கிரேநேர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் கரியப்பா. இவரது மகள் பூர்ணிமா (5). கடந்த சில நாட்களாக பூர்ணிமா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாள். பெற்றோர் அவளை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நலத்தில் மாற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து டாக்டர்கள் பூர்ணிமாவுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் பூர்ணிமாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
 டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..
இதையடுத்து குந்துகோல் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பூர்ணிமா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவம் குந்துகோல் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!