நாய்கள் கடித்த 5 வயது சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை... !

 
சுதாஷா

 

 கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி பூங்காவில் பணிபுரிபவரின் 5 வயது மகளை நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அச்சிறுமி தனியார் மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில்   மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிபவர்  ரகு .

நாய்

இவரது  மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார்.  பூங்காவில் சோனியாவும் , மகளும்  சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பகுதியில் வசித்து வரும்  புகழேந்தி   தான் வளர்க்கும் இரண்டு நாய்களை அழைத்து வந்துள்ளார்.  

ஆம்புலன்ஸ்


 அவருடைய 2 நாய்களும்  சிறுமி சுதக்ஷாவை சுத்துப்போட்டு மாறி மாறி கடிக்கத் தொடங்கின.  சிறுமியின் அலறல்  சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா நாய்களிடமிருந்து தனது மகளை காப்பாற்ற நினைத்தபோது அவரையும் நாய் கடித்து குதறிவிட்டது.  இதனையடுத்து  சிறுமியை போராடி மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்  நாயின் உரிமையாளர்  புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர் .

இந்நிலையில் நாய்கள் கடித்த சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ராட்வீலர்  நாய்களால் கடித்துக் குதறப்பட்ட 5 வயது சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையில் சிறுமியின் உடல்நிலையை தனியார் மருத்துவமனையின் மருத்துவர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web