வீடு புகுந்து பாலியல் பலாத்காரம்.. உறவுகார இளைஞரின் கொடூர செயல்!

 
மூதாட்டி

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ரத்தன்கர் என்ற பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தில் ஒருவருக்கு கடந்த 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையொட்டி திருமண விழாவில் பங்கேற்க குடும்பத்தினர் அனைவரும் சென்றுவிட்டனர். 

மூதாட்டி

ஆனால் வயது முதிர்வு காரணமாக 70 வயது மூதாட்டி மட்டும் வீட்டிலேயே தனியாக இருந்துள்ளார். மூதாட்டியை குடும்பத்தினர் விட்டுச்சென்றதை அதே பகுதியை சேர்ந்த உறவுகார இளைஞர் ஒருவர் கவனித்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் இரவு நேரத்தில் பாட்டியின் வீட்டிற்குள் புகுந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதில் மூதாட்டியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச்சேர்ந்த பெண் வந்துள்ளார். இதை அறிந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். எனினும் இளைஞர் தப்பியோடுவதை அப்பகுதியினர் பார்த்துவிட்டனர். 

மூதாட்டி

இதனிடையே, காயமடைந்த பாட்டிக்கு ரத்தன்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில், வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web