உல்லாசத்திற்கு மறுத்த பெண்.. பேனாவில் கொடூரமாக குத்திக் கொன்ற போக்குவரத்து காவலரின் மகன்!
விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் வேலம்மாள் என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அதன் பேரில் போக்குவரத்து சிறப்பு உதவி கமிஷனர் மகன் ஜீவராஜனை (24) சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்தனர். அப்போது, விசாரணையில் கஞ்சா போதையில் மூதாட்டியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். அப்போது அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவர் கையில் வைத்திருந்த பேனாவைக் கொண்டு சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார்.

இதை போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில் அந்த வாலிபர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
