கிணற்றில் குதித்து 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!
அதிகரிக்கும் மன அழுத்தத்தினால், சமீப காலங்களாக மாணவ, மாணவிகள் தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. சிறு ஏமாற்றங்களையோ, பெற்றோர்கள் நமது நன்மைக்காக சொல்வதையோ ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், பெற்றோர் தன்னைத் திட்டியதால் மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவன் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களுடைய மகன் விஷ்ணுப்பிரியன் (13) அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் பெற்றோர், விஷ்ணுப்பிரியனைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷ்ணுப்பிரியன் மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.
வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகனை காணாமல் தவித்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் விஷ்ணுப்பிரியனின் செருப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பெற்றோர் எண்ணினர்.
இதுகுறித்து அவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி விஷ்ணுப்பிரியனின் உடலை மீட்டனர். அப்போது மாணவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த விஷ்ணுப்பிரியன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!