பூனையை பார்த்துக்கிட்டா சொத்து உங்களுக்கு தான்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சீனர்!

 
சீனர்
 


 
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் வசித்து வந்தவர்  82 வயது முதியவர் லாங். இவர் தான் இறந்த பிறகு தனது அன்பு பூனையான சியான்பாவை பராமரிக்கும் நபருக்கு தனது முழு சொத்தையும், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்பு உட்பட, அளிக்க விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி ஜூலை 3ம் தேதி  South China Morning Post இதழில் வெளியாகி உலக அளவில் ட்ரென்டிங்காக  மாறியுள்ளது. குழந்தைகள் இல்லாத லாங், தனது மனைவி உயிரிழந்து 10 ஆண்டுகளாக  தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
எனவே, மழைக்காலத்தில் தெருவில் அலைந்து திரிந்த சியான்பா மற்றும் அதன் 3 குட்டிகளை தத்தெடுத்து தன்னுடைய பிள்ளைகளை போல வளர்த்து வந்தார். தற்போது, சியான்பாவை தவிர மற்ற 3 பூனைகளும் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த பூனையின் எதிர்காலத்தை உறுதி செய்ய லாங் தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பூனையை பார்த்துகொள்வோருக்கு தனது சொத்து என அறிவித்துள்ளார்.

பூனை

குவாங்டாங் ரேடியோ மற்றும் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் லாங்  இது குறித்து  “சியான்பாவை நல்ல முறையில் பராமரிக்க ஒரு நபரை கண்டறிய விரும்புகிறேன். அவருக்கு எனது முழு சொத்தையும், என் வீடு மற்றும் சேமிப்பையும் வழங்குவேன்,” என தெரிவித்துள்ளார்.  இந்த அசாதாரண முடிவு, பூனை மீதான அவரது அளவற்ற அன்பையும், அதன் நலனை உறுதி செய்யும் அக்கறையையும் அவருடைய மனதில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காண்பிக்கிறது.

பூனை

இருப்பினும் யார் இந்த பூனையை பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்கவில்லை. தாத்தா கொடுத்துள்ள இந்த அறிவிப்பை பார்த்த பலரும் இந்த முதியவரின் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருக்கலாம். அதனால் தான் யாரும் முன்வரவில்லை எனவும், லாங் தனது சொத்தை வழங்க விரும்பினாலும், அவரது உறவினர்கள் இதை சட்டரீதியாக எதிர்க்கலாம் எனவும்,  சிலர் பணம் இல்லாமலேயே சியான்பாவை தத்தெடுக்க தயாராக இருப்பதாகவும், பூனைகளை உண்மையாக நேசிப்பவர்கள் இதை ஒரு வாய்ப்பாக கருத மாட்டார்கள் என பேசி வருகின்றனர்.  
மேலும், இதற்கு முன்பு, ஷாங்காயைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, தனது குழந்தைகள் தன்னை புறக்கணித்ததால், 2.8 மில்லியன் டாலர் சொத்தை தனது செல்லப்பிராணிகளுக்கு வழங்க முடிவு செய்தார். அவரை தொடர்ந்து இப்போது சீனாவை சேர்ந்த இந்த முதிய நபர் தன்னுடைய பூனையை பார்த்து கொள்பவருக்கு சொத்து என அறிவித்திருப்பது  உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?