கல்லூரி மாணவன் ஓட ஓட விரட்டிக் கொலை... காதலி கண்முன்னே பயங்கரம்!

 
உதயா

 சென்னை தாம்பரம் கிழக்கு திருவள்ளுர் நகரில் வசித்து வருபவர் கனகராஜ்.‌ இவரது மகன் உதயா என்ற உதயகுமார் .  இவர் பள்ளிக்கரணை பகுதியில் தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து கொண்டே  பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்  தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சிட்லப்பாக்கம் சேது நாராயணன் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.  அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் உதயாவை வழிமறித்தனர். 

அடித்தே கொலை
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமார் தப்பிக்க முயற்சித்த போது அந்த கும்பல் ஓட ஓட விரட்டி காதலி கண்முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. அக்கம் பக்கத்தினர்  அதிர்ச்சி அடைந்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஆம்புலன்ஸ்


இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்   2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாம்பரம் கிழக்கு  திருவள்ளுவர் நகர், கண்ணப்பர் தெருவில் ஆட்டோ நிறுத்துவதில்  தகராறு ஏற்பட்டது.  உதயகுமாருக்கும், நரேஷிற்கும் கைகலப்பு நடந்த நிலையில் உதயகுமார் , நரேஷை  கத்தியை காட்டி  மிரட்டி ஆபாசமாக திட்டியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web