பாலத்தில் ரயில்... 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி... பகீர் வீடியோ!
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ராகுல்மேவாடா. இவரது மனைவி ஜான்வி. ராகுல் தனது மனைவியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பாலத்தின் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது.
पाली के मारवाड़ जंक्शन के पास गोरमघाट पुल पर पति-पत्नी फोटोशूट करवा रहे थे, ट्रेन आ गई तो दोनों 90 फीट खाई में कूद गए। दोनों गंभीर घायल अस्पताल में है, पत्नी का पैर फ्रेक्चर है, वहीं पति की रीढ़ की हड्डी में गहरी चोट है। #ViralVideos #pali #Goramghat pic.twitter.com/48t0klLpKy
— Kishan singh Gurjar (@KishansinghGur6) July 14, 2024
ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த தம்பதிக்கு விலகி நிற்க நேரம் இல்லை. உடனே இத்தம்பதி, ரயிலின் மீது மோதுவதை விட கீழே குதித்துவிடலாம் என முடிவு செய்து திடீரென 90 அடி பள்ளத்தில் கீழே குதித்தனர்.இதை கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தண்டவாளத்தில் ஆட்கள் நிற்பதை அறிந்த ஓட்டுநர், உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை உடனடியாக நிறுத்த முயற்சி செய்து நிறுத்தி விட்டார். உயிர் பயத்தில் கீழே விழுந்ததில் இருவருக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் ராகுலின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஜான்விக்கு கால் முறிவு ஏற்பட்டதுடன், முதுகுத்தண்டு பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் பாலியில் உள்ள பங்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
