ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து... 31 பேர் பலியான சோகம்!

 
தீயணைப்பு சீனா

சீனாவில் யின்சுவான் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்  31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 


மக்கள் அதிகம் புழங்கும் சீனாவின் யின்ஞ் சுவான் நகரத்தில் உள்ள பார்பி க்யூ உணவகத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பகுதிகளில் இருந்த உணவகத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதால் பெரும் சேதம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்றிரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில், தீயணைப்பு படையினர் அதிகாலை 4 மணிக்கு சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

தீயணைப்பு சீனா

தற்போது நடைப்பெற்று வரும் டிராகன் படகு திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பலரும் திருவிழாவைக் காண குழுமியிருந்தனர். கண்ணாடி துகள்கள், பீங்கான் கோப்பைகள், தட்டுகளுமாக தெரு முழுக்க உடைந்து சிதறி அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web