தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... நடுரோட்டில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராம் திடீரென அலறி அடித்தபடி தாவிக்குதித்து சாலையில் இறங்கி ஓடி உள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, 6 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீராமை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீஸார் ஸ்ரீராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பரவலாக பழிக்கு பழியாக படுகொலைகள் நடந்து வரும் சூழலில், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!