பெற்ற மகளை 25 முறை குத்தி கொலை செய்த தந்தை!! பகீர் சிசிடிவி ஃபுட்டேஜ்!!
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை காதலன் நடுரோட்டில் 40 முறை கத்தியால் குத்தியும், தலையில் கல்லைத் தூக்கி போட்டும் கொலை செய்தான். இச்சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்குள் அதே போல் மற்றொரு சம்பவம் குஜராத்தில் நடந்தது பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாடியில் படுப்பது குறித்த வாக்குவாதம் தகப்பனுக்கும் மகளுக்கும் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அப்பா மகளை திட்டியுள்ளார்.மகள் சொல் பேச்சு கேட்காததால் கத்தி எடுத்து பலமுறை குத்தி விட்டார். இதனை தடுக்க வந்த மனைவி மீது கத்தி குத்து விழுந்தது. இந்த கொடூர சம்பவத்தில் அதே இடத்திலேயே மகள் பரிதாபமாக பலியானார். குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து வருபவர் ராமானுஜ் சாஹூ (45). இவருக்கு ரேகா என்ற மனைவியும், மகன்களும், சாந்தா என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 18ம் தேதி அன்று இரவு நேரத்தில் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது தொடர்பாக ராமானுஜுக்கும் அவரது மகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
SURAT:- man attacked his wife and daughter with a knife over a trivial issue, leading to the death of his 19-year-old daughter in Gujarat’s Surat district on May 19.
— कट्टर हिंदू आशुतोष (@sahuashutosh202) May 30, 2023
dispute of sleeping on the terrace but father forces them to sleep in room and argument happened and u see 💔💔 pic.twitter.com/bQbCdouRuT
இதில் மனைவியும் மற்ற மகன்களும் தலையிட்ட நிலையில், கணவர் ராமானுஜ் ஆத்திரம் அடைந்துள்ளார். வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளை சரமாரியாக குத்தி தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு பதறிப்போன தாய் ரேகா மகளை காப்பாற்ற குறுக்கே பாய்ந்துள்ளார். இதில் அவருக்கும் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் ராமானுஜ் தனது மகளை ஆத்திரம் தீர 25 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த இளம்பெண் சந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதே கொலை வெறியில் ராமானுஜ் தனது மனைவியையும் கத்தியால் குத்தி அவரது இரண்டு விரல்களை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ராமானுஜை கைது செய்து சிறையில் அடைத்தது. மனைவி ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தின் பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!