ஓடும் பேருந்தில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!! வைச்சு செஞ்ச பொதுமக்கள்!!

 
ஜனாஸ்விங்

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜனாஸ்விங் (20) என்ற இளம்பெண், திண்டிவனம் அருகே கோணமங்கலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளையில் தங்கி தன்னார்வலராக சேவையாற்றி வருகிறார். ஜனாஸ்விங் கடந்த 7ஆம் தேதி பெங்களுருவில் உள்ள தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதற்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் ஏறி பயணித்துள்ளார்.

தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது, ஜனாஸ்விங்ன் பின் சீட்டில் இருந்த இளைஞர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜனாஸ்விங்

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் பகீர் காட்சிகள் இருந்தது. அந்த இளைஞரை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதில் ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் பெங்களுரை சேர்ந்த சரத் (22) என்பதும், அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.ஹாக்கி வீரரான இவர், கடந்த 5ஆம் தேதி தனது தோழியுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்ப சென்றபோது, பேருந்தில் தனக்கு முன் சீட்டில் பயணித்த ஜெர்மன் நாட்டு இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

ஜனாஸ்விங்

சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கிடைத்த உருவத்தை கொண்டு, தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்தனர். அங்கு இளைஞர் சரத்தை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பாலியல் தொல்லை அம்பலமான நிலையில், அவரை  காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 
 

From around the web