பெரும் சோகம்.. ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலியான சோகம்!

 
விபூஷ்னியா

சேலம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ்வரன், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷ்னியா ஆகிய இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். மருத்துவர்களான இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, தங்கள் காதல் குறித்து வீட்டாரிடம் கூறினர். இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியதால் கடந்த ஜூன் 1ஆம் தேதி லோகேஷ்வரன் மற்றும் விபூஷ்னியா ஆகிய இருவருக்கும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

விபூஷ்னியா

திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் இருவரும் ஹனிமூன் செல்ல திட்டம்போட்டனர். அதன்படி இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு இன்பச் சுற்றுலா செல்றனர். அங்கு நட்சத்திர விடுதியில் தங்கிய புதுமண தம்பதிகள், ஜோடியாக பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

அந்தவகையில் அங்கு விரைவு மோட்டார் படகில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த மோட்டார் படகில் அவர்கள் பயணித்த போது அது விபத்துக்குள்ளானது. இதில் புதுமண ஜோடியான லோகேஷ்வரன் மற்றும் விபூஷ்னி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். 

விபூஷ்னியா

திருமணமான சில நாள்களிலேயே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவமானது இரு வீட்டார் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web