பயங்கர தீவிபத்து... அலறிய மக்கள்... முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது!
தூத்துக்குடியில் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் அலறிய நிலையில் நல்ல வேளையாக முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணியில் பயன்படுத்திய கழிவுகளுக்கு நேற்று தீ வைத்தால் தூத்துக்குடி நகர் முழுவதும் கரும் புகை மூட்டம் பரவியது.

தூத்துக்குடி 1ம் ரயில்வே கேட் மற்றும் 2ம் ரயில்வே கேட் ஆகியவற்றுக்கு இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் எஞ்சிய குப்பைகளுக்கு ஊழியர்கள் சிலா் நேற்று தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அந்தக் கழிவுகளில் மரக்கட்டைகள், காப்பா் வயா் கழிவுகள், பிளாஸ்டிக் ஆகியவையும் சேர்ந்து இருந்ததால், தீ மள மளவென பரவி வேகமாக எரியத் தொடங்கியது.
இதன் காரணமாக கரும்புகை எழுந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தூத்துக்குடி நகரில் பெரிய தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது.

நகர் முழுவதும் பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் முச்சுத்தினறல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ பரவிய நேரத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியே சென்றது. தீப்பொறி காற்றில் பரவினால் ரயிலில் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இது போன்று அஜாக்கிரதையாக பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
