நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்... அடுத்தடுத்து சாம்பலான 5 வாகனங்கள்.. சென்னையில் பரபரப்பு!

 
வாகனம் விபத்து தீ

சென்னை அடையாறு பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், பாலத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களிலும் அடுத்தடுத்து தீ பரவி எரிந்து சாம்பலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த இடத்தில் வாகன நெரிசலும், சிறிது நேர  பரபரப்பும் ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் சதத்தைக் கடந்த நிலையில், மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், அடையாறு திருவிக பாலத்தின் கீழாக  சிக்னலைக் கடந்த நிலையில், ரோட்டில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று திடீரென புகை கிளப்பியபடியே தீப்பற்றி எரிய துவங்கியது. 


தீ வேகமாக கொளுந்து விட்டு எரிந்த நிலையில், காரில் இருந்த தீ, அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் பரவியது. இந்த தீவிபத்தில் சொகுசு காரும், 5 இருசக்கர வாகனங்களும் முழுவதுமாக எரிந்து நாசமானது.

நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த பிற வாகனஓட்டிகள் உடனடியாக கொடுத்த தகவலையடுத்து, மயிலாப்பூர் மற்றும் அடையாரில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முழுமையாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்தனர்.

Adyar

காரில் திடீரென தீ பற்றி எரிந்ததும், உடனடியாக காரில் இருந்து கீழிறங்கி ஓட்டுனர் ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காரில் எப்படி திடீரென தீ விபத்து ஏற்பட்டது? காரின் உரிமையாளர் யார்? என்று சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web